பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது. பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் 25.48 சதவீத பங்குகளை வைத்திருந்த பிரஞ்ச் உணவு நிறுவனமான தானோன் குரூப், அந்த 25.48 சதவீத பங்குகளை நுஸ்லி வாடியா குரூப்பிற்கு சொந்தமான லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு விற்க சம்மதித்திருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி இந்த பங்குகள் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு கைமாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுமார் 200 மில்லியன் டாலர் ( சுமார் 1,000 கோடி ரூபாய் ) கொடுத்து தானேன் குரூப்பிடமிருந்த 60.86 லட்சம் பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் பங்குகளை ( 25.48 சதவீதம் ) வாங்குவதன் மூலம், பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் லீலாலேண்ட்ஸ் இடம் வந்து விடுகிறது. இந்த பங்குகளை வாங்குவது தொடர்பாக, கடந்த மூன்று வருடங்களாக தானோன் குரூப்புக்கும் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு மிடையே நடந்து வந்த கடும் போராட்டம் இதன் மூலம் முடிவுக்கு வருகிறது.

வருது வருது வால்மார்ட் வருது!

டெல்லி: பார்தி ஏர்டெல்லுடன் ஒப்பந்தம் போட்டு கிட்டத்தட்ட 30 மாதங்கள் கழித்து தனது கூட்டு வர்த்தகத்தை இந்தியாவில் கடைப்பரப்ப வருகிறது உலகின் முதல் நிலை சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்.

‘பார்தி வால்மார்ட்’ என்ற புதிய நிறுவனத்தின் கீழ் இந்திய முழுக்க ‘கேஷ் அண்ட் கேர்ரி’ எனும் பெயரில் புதிய சில்லறை விற்பனை நிலையங்களைத் திறக்க உள்ளன. முதல் கிளை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இன்னும் சில தினங்களில் துவங்குகிறது.

பார்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஞ்சன் பார்தி மித்தல் இந்தத் தகவலை எப்ஐசிசிஐ கூட்டத்தில் அறிவித்தார்.

இந்த கேஷ் அண்ட் கேர்ரி கடைகள் ஆரம்பத்தில் சில காலத்துக்கு வட இந்திய நகரங்களில் மட்டுமே திறக்கப்படும். அஹ்கு முழுமையாகக் காலூன்றிய பிறகே தெற்குப் பக்கம் வருவார்களாம்.

ஏற்கெனவே இந்த கடைகள் தங்களுக்கான வாடிக்கையாளர்களைப் பதிவு செய்யும் பணியில் இறங்கிவிட்டன. இப்போதாக்கு இவர்களின இலக்கு பொதுமக்கள் அல்ல. பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், சிறு வியாபாரிகள், சமையல்காரர்கள்… இவர்களை தங்கள் வாடிக்கயாளராக மாற்றிக் கொண்டு அவர்களுக்கு மொத்தமாக பொருட்களை விற்பதுதான் திட்டம். வீடுகளுக்கும் கூட இந்த மாதிரி மொத்த டெலிவரி செய்வார்களாம்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஈஸிடே எனும் பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை பார்தி நிறுவனம் நடத்தி வருவதால், வாடிக்கையாளர்களைப் பிடிப்பது சுலபமாகவே உள்ளதாம். இந்த ஈஸிடே ஷோரூம்களுக்கு டெக்னிக்கல் உதவிகள் உள்பட பலவற்றை வால்மார்ட் வழங்கவிருக்கிறது. இது தவிர கேஷ் அண்ட் கேர்ரியும் தனியாக நடக்கும்.

சில காலத்துக்குப் பின் ஈஸிடே கடைகளில் வால்மார்ட்டும் ஈடுபடக்கூடும்.

சார்லஸ் டிக்கன்ஸின் ‘ பிளீக் ஹவுஸ் ‘ விற்பனைக்கு வருகிறது

லண்டன் : பிரபல ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் இரு நூறு ஆண்டு கால பழமையான வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் பிராட்ஸ்டேர்ஸ் என்ற இடத்தில் இருக்கும் பிளீக் ஹவுஸில் என்ற அவரது வீட்டில் இருந்து தான், டேவிட் காப்பர்ஃபீல்ட் என்ற பிரபல நாவலை அவர் எழுதினார். ஆறு படுக்கை அறைகளைக்கொண்டு, ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வீடு தான் இப்போது விற்பனைக்கு வருகிறது. டெரன்ஸ் பெயின்டர் புராபர்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இதனை விற்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் விலை 2 மில்லியன் பவுன்ட்ஸ் ( சுமார் 15 கோடி ரூபாய் ) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கடற்கரையை ஒட்டியி ருக்கும் இருக்கும் இந்த வீடு, இங்கிலாந்தில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 1801ம் வருடம் கட்டப்பட்ட இந்த வீடு, 2006ல் நடந்த தீ விபத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, 40,000 பவுன்ட்ஸ் செலவு செய்து சரிசெய்யப்பட்டது. இந்த வீடு இப்போது எதற்காக விற்கப்படுகிறது என்பது தெரிய வில்லை. இத்தனைக்கும் இந்த வீட்டின் இப்போதைய சொந்தக்காரரான ரிசர்ட் ஹில்டன், ஒரு பிரபல ஜூவல்லரியின் <உரிமையாளர். சமீப காலமாக அவரது ஜூவல்லரி பிசினஸ் கொஞ்சம் டல் அடிப்பதாக சொல்லப் படுகிறது. ஹில்டனின் மகள் கெல்லி, கடந்த மாதம் ஜூவல்லரி விற்பனையின் போது, ஹால்மார்க் மோசடி ஒன்றில் சிக்கி இருக்கிறார். இப்போது அவர், அதற்காக தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு பிரச்னையில் ரிச்சர்ட் ஹில்டன் சிக்கி இருப்பதால் தான் அவர் அந்த வீட்டை விற்க முன் வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

நானோ காரை விட அதிக விலையுள்ள புல்லட் பைக்

மும்பை : டாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று ராயல் என்ஃபீல்ட்டின் புல்லட் மேசிஸ்மோ மாடல் பைக். இதன் இப்போதைய விலை ரூ.1,06,000

எல்லாம் தேர்தல் மயம்

திங்களன்று சந்தைகளின் துவக்கமே அபாரமாக இருந்தது. சந்தை 186 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. ஏறியதற்கு காரணம், ஜி-20 மாநாட்டின் தொடர்ச்சியாக விளையப்போகும் நன்மைகளும், ஷார்ட் கவரிங்கும் இருந்ததாலும் சந்தை மேலே சென்றது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியதும் சந்தை மேலே சென்றதற்கு ஒரு காரணம்.நேற்று துவக்கமே சந்தையில் பெரிய சரிவில் தான் துவங்கியது. 362 புள்ளிகள் கீழே சென்று 10,171 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், பீனிக்ஸ் பறவை போல சந்தை உயிர்த்தெழுந்து 362 புள்ளிகள் நஷ்டத்தையும் சரி செய்து பின்னர் 207 புள்ளிகள் மேலேயும் சென்றது. நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.இறுதியாக 207 புள்ளிகள் கூடி 10,741 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. இது, 30 சதவீதத்திற்கும் மேலே சென்றிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் இது தான் அதிகபட்ச உயர்வு. எல்லாம் தேர்தல் மயம்.ஏற்றுமதி புள்ளி விவரங்கள் ஏமாற்றம் தருவதாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 17.25 பில்லியன் அளவு ஏற்றுமதி செய்திருந்தோம். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் அது 12 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. இது, 30 சதவீதம் குறைவு.

 – சேதுராமன் சாத்தப்பன் –

ஹரியானா-காங். எம்பி நவீன் மீது ஷூ வீச்சு

குருஷேத்ரா: ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜின்டால் மீது ஷூ வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷூ விசியவரை கைது செய்தனர்.

சமிபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங் ஷூவை விசி இந்திய அரசியலை பரபரப்பாக்கினார்.

இந்நிலையில்
காங்கிரஸ் எம்.பி ஜின்டால் இம்முறை தான் மீண்டும் போட்டியிடும் குருஷேத்ரா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த ராம் குமார் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஜின்டால் மீது ஷூ வீசினார். ஆனால், ஷூ அவர் மீது படாமல் சென்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, கூட்டத்தில் இருந்து தூக்கி சென்றனர்.

அப்போது ராம் குமார் கூறுகையி்ல, காங்கிரசின் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஷூ வீசினேன் என்றார்.

இந்நிலையில் ஜின்டால் கூறுகையி்ல், அந்த நபர் நன்கு குடித்துவிட்டு வந்துள்ளார். அதனால் தான் அவ்வாறு நடந்து கொண்டார் என்றார்.

Leave a comment